காதலில் விரிசல்: கோபத்தில் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை நீக்கிய இலியானா 

 

காதலில் விரிசல்: கோபத்தில் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை நீக்கிய இலியானா 

நடிகை இலியானா தனது காதலருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்கியுள்ளார். 

சென்னை: நடிகை இலியானா தனது காதலருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்கியுள்ளார். 

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை இலியானா, தமிழில் 2006ம் ஆண்டு கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் நடத்துத்திருந்தார். இதையடுத்து பாலிவுட் வாய்ப்பு அவரைத் தேடி வர கடந்த சில மாதங்களாகப் பாலிவுட் நடிகையாகவே இருந்தார். தற்போது ‘Pagalpanti’ என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். 

ileana

இந்த நிலையில் இவர் நீண்ட நாட்களாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரைக் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. ஏன்.. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று கூட கூறப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இருந்த இலியானா அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு வந்தார். 

eliyana

நன்றாக சென்று கொண்டு இருந்த காதல் தற்போது பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் பிரிவது தான் சரியான தீர்வு என்று நினைத்து அவர்கள் பிரிந்து விட்டார்களாம். இதையடுத்து இருவரும் தாங்கள் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்களாம்.