காதலியை பாலியல் வன்கொடுமை தந்தை…விட்டுக்கொடுக்காமல் போலீசார் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட காதலன்!

 

காதலியை பாலியல் வன்கொடுமை தந்தை…விட்டுக்கொடுக்காமல் போலீசார் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட காதலன்!

15 நாட்கள் நீதிமன்ற காவலில்  சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்தியானந்தம் (வயது 50). அ.ம.மு.க.வை பிரமுகரான இவர் தனது  மகன் முகேஷ்கண்ணன் அதே ஊரை சேர்ந்த பெண்ணை காதலிப்பதை வெறுத்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு  மகனின் காதலியை தனியாக சந்தித்த கருப்பு நித்தியானந்தம் என்னுடன் வந்தால் மகனுடன் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறி அழைத்து சென்று அந்த பெண்ணை மிரட்டி கட்டாய  தாலிகட்டியதுடன்  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

 

மேலும் அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைத்து பெண்ணை சித்ரவதை செய்து  வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்த தப்பி சென்ற அந்த பெண் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து கருப்பு நித்தியானந்தம் அவருக்கு உடந்தையாக இருந்த சக்திவேல், பவுன்ராஜவள்ளி ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை  வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  15 நாட்கள் நீதிமன்ற காவலில்  சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ttn

இந்நிலையில் காதலிக்கு தனது  தந்தையால் நடந்த கொடுமையை அறியாத காதலன் முகேஷ் கண்ணன் போலீசாரின் தகவலின் பேரில் நடந்ததைக் கேள்விப்பட்டு கதறி அழுதுள்ளார். பின்னர் எந்த நேரத்திலும் என் காதலியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து இருவரது விருப்பத்தின் பேரில், அவருக்கும் காதலிக்கும் போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.