காதலியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்த கொடூரன்?..

 

காதலியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்த கொடூரன்?..

சுனில் உடன் மஸ்கட் செல்வதற்காக மார்ச் 4-ஆம் தேதி அந்த பெண்ணை விமான நிலையத்தில் விடும்போது கடைசியாக பார்த்துள்ளது அந்த குடும்பம். பெண்ணை தொடர்பு கொள்ள இயலாததால், மார்ச் 7-ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

ஹைதராபாத்: சுனில் என்ற மெக்கானிக்கல் இன்ஜினியர் தன்னுடன் கல்லூரியில் படித்த ஐடி மாணவியை காதலித்து வந்துள்ளான். இருவரும் ஹைதராபாத்தில் வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்திருக்கிறார்கள். மஸ்கட்டில் வேலை செய்யப் போவதாகவும், அதற்கு விசா எடுக்க இருவரும் நேர்காணலுக்கு சென்றதாகவும் பெண் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

sg

சுனில் உடன் மஸ்கட் செல்வதற்காக மார்ச் 4-ஆம் தேதி அந்த பெண்ணை விமான நிலையத்தில் விடும்போது கடைசியாக பார்த்துள்ளது அந்த குடும்பம். பெண்ணை தொடர்பு கொள்ள இயலாததால், மார்ச் 7-ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் மெட்சால் பகுதியில் உள்ள பள்ளி அருகே ஒரு சூட்கேஸ் கிடைத்துள்ளது, அதில் ஒரு பெண்மணியின் உடல் இருப்பது தெரிய வந்திருக்கிறது. விசாரணையில், சுனில் தன் காதலியை கொலை செய்தது சூட்கேஸில் வைத்து வீசியது கண்டறியப்பட்டது.

fvxvv

சுனிலுக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை, மஸ்கட் போவதாக அந்த பெண்ணை அழைத்து, பக்கத்தில் உள்ள லாட்ஜுக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளான். அவனை கைது செய்து ஆள்கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.