காதலியை கரம் பிடித்தார் விஜய் தேவரகொண்டா பட இயக்குநர்!

 

காதலியை கரம் பிடித்தார் விஜய் தேவரகொண்டா பட இயக்குநர்!

விஜய் தேவரகொண்டா பட இயக்குநருக்கு இன்று திருமணம் நடைபெற்றதாக அறிவித்துள்ளார். 

சென்னை: விஜய் தேவரகொண்டா பட இயக்குநருக்கு இன்று திருமணம் நடைபெற்றதாக அறிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் அரிமா நம்பி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆனந்த் ஷங்கர். அதைத்தொடர்ந்து இவரின் அடுத்த படமான இருமுகன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசியாக இவர் நடிகர் விஜய் தேவரகொண்டா வைத்து இயக்கிய நோட்டா படம் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறாததால் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் இவரும் திவ்யங்காவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். அதைத்தொடர்ந்து சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்தார். 

anand shankar

அதையடுத்து இன்று அவரது திருமணம் நடைபெற்றது. அதில் அவருடைய நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சில பிரபலங்களும் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தள மூலம் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.