காதலித்து வந்த சிறுவன்- சிறுமி: எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்த பயங்கரம்!

 

காதலித்து வந்த சிறுவன்- சிறுமி: எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்த பயங்கரம்!

சுந்தரியின் மரணம் குறித்து அவரின் தாயார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்கோட்டை என்னும் பகுதியைச் சேர்ந்த சுந்தரி கணவனைப் பிரிந்து தனது தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் உறவினர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தரி காலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

deqad

சுந்தரியின் மரணம் குறித்து அவரின் தாயார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, பண்ணைக்கோட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பயந்து போன அந்த சிறுமி ஏறுக்கு மாறாகப் பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த சிறுமியிடம் விசாரணையைத் தீவிரப் படுத்தியுள்ளனர். 

dead

அதில் அந்த சிறுமி, திண்டுக்கல்லில் படிக்கும் போது திண்டுக்கல்லைச் சேர்ந்த 17 வயது சிறுவனைக் காதலித்து வந்ததாகவும், தற்போது இங்கே வந்துவிட்டதால் சுந்தரி அக்காவின் வீட்டில் அடிக்கடி அவர்கள் சந்தித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

ttn

அதனை அறிந்த சுந்தரி, இப்படி எல்லாம் செய்தால் பெற்றோரிடம் மாட்டிக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டியதால் சுந்தரியை நாங்கள் இருவரும் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பின்பு, அந்த சிறுமியைக் கைது செய்த காவல்துறையினர், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர். சுந்தரியைக் கொன்ற பிறகு தலைமறைவான அந்த சிறுவனை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.