காதலித்து செருப்பைக் காட்டிய மாணவி! ஏமாற்றியதால் ஆசிட் வீசிய மாணவன்! 

 

காதலித்து செருப்பைக் காட்டிய மாணவி! ஏமாற்றியதால் ஆசிட் வீசிய மாணவன்! 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை, குத்தாலத்தைச் சேர்ந்த முத்தமிழன் என்பவன் பள்ளியில் படித்த போதே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் காதலித்து வந்த நிலையில், முத்தமிழனின் நடவடிக்கைப் பிடிக்காமல் அந்த மாணவி முத்தமிழனின் தொடர்பை தவிர்த்து வந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை, குத்தாலத்தைச் சேர்ந்த முத்தமிழன் என்பவன் பள்ளியில் படித்த போதே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் காதலித்து வந்த நிலையில், முத்தமிழனின் நடவடிக்கைப் பிடிக்காமல் அந்த மாணவி முத்தமிழனின் தொடர்பை தவிர்த்து வந்துள்ளார். தன் காதலி, தன்னுடன் பேசாததால் மனமுடைந்த முத்தமிழன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. 

lovers

இந்நிலையில், பல்கலைக் கழகத்தின் விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாணவி நடந்து சென்றுக் கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மாணவி செருப்பைக் காட்டி முத்தமிழனை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழன், கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்டை மாணவியின் மீது வீசியுள்ளான். ஆசிட் வீச்சினால் முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டு, நடு ரோட்டில் அலறித் துடித்த மாணவியை, அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

acid

சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள், முத்தமிழனைப் பிடித்து அடித்தனர். இதில் காயமடைந்த முத்தமிழனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து, சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.