காதலித்தார் ..கைவிட்டார் …சுடப்பட்டார் -பணம் கிடைக்காததால் பிணமான காதலி..

 

காதலித்தார் ..கைவிட்டார் …சுடப்பட்டார் -பணம் கிடைக்காததால் பிணமான காதலி..

பஞ்சாப் அமிர்தசரஸ் அருகே அஜ்னாலாவில் வசிக்கும் 19 வயது அன்மோல், அமிர்தசரஸில் ஒரு அழகு நிபுணர் படிப்பைப் படித்து வந்தார்.அவரை பிப்ரவரி 26 அன்று, லவ்தீப் என்ற ஒரு வாலிபர்  கடத்தி, அவரது தந்தையிடமிருந்து பணய தொகையாக ரூ .20 லட்சம் கோரியதாகக் கூறப்படுகிறது.

அமிர்தசரசில் பிப்ரவரி 26 ஆம் தேதி கடத்தப்பட்ட 19 வயது பெண்ணின் சடலம்  லோஹர்கா சாலையில் பாழடைந்த  வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.
பஞ்சாப் அமிர்தசரஸ் அருகே அஜ்னாலாவில் வசிக்கும் 19 வயது அன்மோல், அமிர்தசரஸில் ஒரு அழகு நிபுணர் படிப்பைப் படித்து வந்தார்.அவரை பிப்ரவரி 26 அன்று, லவ்தீப் என்ற ஒரு வாலிபர்  கடத்தி, அவரது தந்தையிடமிருந்து பணய தொகையாக ரூ .20 லட்சம் கோரியதாகக் கூறப்படுகிறது.

arrest

 

பிறகு அவரின் தந்தை பணம் தராததால்  லத்தீப் ,அன்மோளை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.பிறகு அவரது உடலை லோஹர்கா சாலையில் வீசியுள்ளார். 
இது பற்றி தகவலறிந்த போலீஸ் நடத்திய விசாரணையில் இருவரும் ஏற்கனவே காதலித்துள்ளதாகவும்,பிப்ரவரி 26 அன்று அமிர்தசரஸ் ரஞ்சித் அவென்யூவில் அன்மோல் லவ்தீப்பை சந்திக்க வந்ததாகவும்  காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
சில காலமாக அவர்களது காதலில் முறிவு ஏற்பட்டதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. இறந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இது பற்றி போலீஸ்  விசாரணைகள் நடந்து வருகின்றன.