காதலிக்க மறுத்த மாற்றுதிறனாளி பெண்ணின் இருசக்கர வாகனத்தை எரித்த முன்னாள் காதலன்!
மல்லிகாவை விடாமல் துரத்திய பிரபாகரன் என்னை காதலிக்காவிட்டால் உன்னையும் உன் இருசக்கர வாகனத்தையும் எரித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மல்லிகா என்ற பெண் சோழவரத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரை காதலித்துள்ளார். ஆனாலும் அந்த நபரின் நடத்தை சரியில்லாததால் மல்லிகா பிரபாகரனை விட்டு பிரிந்துள்ளார். இருப்பினும் மல்லிகாவை விடாமல் துரத்திய பிரபாகரன் என்னை காதலிக்காவிட்டால் உன்னையும் உன் இருசக்கர வாகனத்தையும் எரித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி மல்லிகா வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. இதுகுறித்த மல்லிகா அளித்த புகாரில் செம்பியம் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பிரபாகரன் மற்றும் நண்பர் இருவரும் இணைந்து மல்லிகா வாகனத்தைத் தீயிட்டு எரித்தது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாகியுள்ள அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.