காதலிக்கு திருமணம்… போஸ்டர் அடித்து ஒட்டிய முன்னாள் காதலன்; அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!

 

காதலிக்கு திருமணம்… போஸ்டர் அடித்து ஒட்டிய முன்னாள் காதலன்; அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!

ஹோலி வாழ்த்து கூறி போஸ்டர் அச்சடித்து அதை அந்த பெண் வீட்டிற்கு அருகில் உள்ள இடங்களில் ஒட்டியுள்ளா

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சரோஜ் குமார். இவர் சலோன் பகுதியை பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஜாலியாக ஊரை சுற்றி வந்த இவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காதல் பறவைகள் இருவரும் பிரிந்து வேறு வேறு பாதையில் சென்றுள்ளனர். இந்நிலையில் சரோஜ்குமாரின் முன்னாள் காதலிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு அடுத்த வாரம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதையறிந்த அவர் காதலியை பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். 

ttn

அந்த வகையில் அடுத்த வாரம் ஹோலி பண்டிகை என்பதால் இருவரும் புகைப்படத்தில் ஒன்றாக இருப்பது போல் மார்பிங் செய்து ஹோலி வாழ்த்து கூறி போஸ்டர் அச்சடித்து அதை அந்த பெண் வீட்டிற்கு அருகில் உள்ள இடங்களில் ஒட்டியுள்ளார். 

ttn

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சரோஜ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.