காதலிக்கு டெமோ காட்டினேன்… பகீர் வாக்குமூலம்

 

காதலிக்கு டெமோ காட்டினேன்… பகீர் வாக்குமூலம்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை தேனாம் பேட்டையைச் சேர்ந்த பிரசன்னா லேப்சா என்பவரிடம், பைக்கில் வந்த காதலர்கள் 17ஆயிரம் ரூபாய் செல்போனை பறித்துச் சென்றனர். இவ்வழக்கில் சிசிடிவி காட்சிகளை வைத்து, சூளைமேடு ராஜூ மற்றும் கரூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுவாதி ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். 
 
கரூரை சேர்ந்த சுவாதி சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் விஷூவல் கம்யூனிகேஷன் பயின்றுவந்தார். சமூக வலைதளம் மூலம் சுவாதிக்கு ராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு கேளிக்கை நட்சத்திர விடுதிகளில் பணிபுரிகிறார். ஹாஸ்டலில் தங்கியிருக்கும் சுவாதிக்கு ஹாஸ்டல் பணம் கட்ட பணம் இல்லாததால் ராஜூவும் ஆர்த்தியும் திருட திட்டமிட்டுள்ளனர். 

காதலிக்கு டெமோ காட்டினேன்… பகீர் வாக்குமூலம்

தேனாம்பேட்டை பார்த்தசாரதி பேட்டையை சேர்ந்த பிரசன்னா ஓட்டுனர் பயிற்சிக்கு சென்று விட்டு, சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கரவாகனத்தில் வந்த ஆர்த்தியும், ராஜூவும் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரசன்னாவின் கைப்பையை பறித்துச் சென்றுவிட்டார். அதில் 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் இருந்துள்ளது. அந்த செல்போனை பர்மா பஜாரில் விற்று 2500 ரூபாய் பணம் பெற்றுள்ளனர். சிசிடிவியில் பதிவான இந்த வழிப்பறி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் ராஜூவையும், சுவாதியையும் கைது செய்தனர். 

ராஜூவிடம் மேற்கொண்ட விசாரணையில், செல்போனை எப்படி பறிப்பது என சுவாதிக்கு டெமோ காட்டியதாகவும், வழிப்பறியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்துள்ளார்.