காதலிக்கு கல்யாண ஆசை -காதலனுக்கு கலைக்க ஆசை -கடைசியில் நடந்த சோகம் .

 

காதலிக்கு கல்யாண ஆசை -காதலனுக்கு கலைக்க ஆசை -கடைசியில் நடந்த சோகம் .

கல்யாணத்திற்கு வற்புறுத்திய கர்ப்பிணி  காதலியை கொன்று புதைத்த காதலனை போலீசார் கைது செய்தார்கள்

காதலிக்கு கல்யாண ஆசை -காதலனுக்கு கலைக்க ஆசை -கடைசியில் நடந்த சோகம் .

ஜார்க்கண்டின் பாலமு மாவட்டத்தில் ஹுசைனாபாத் காவல் நிலைய பகுதியில் உள்ள கோரியாடி கிராமத்தில் வசிக்கும் 17 வயதான ஒரு பெண் அதே பகுதியில் வசிக்கும் 18 வயதான வாலிபரை காதலித்து வந்தார் .இந்நிலையில் அந்த காதலன் அந்த பெண்ணிடம் அடிக்கடி உல்லாசமாக இருந்தால் அவர் கர்ப்பமானார் .அதனால் அந்த காதலி அதிர்ச்சியுற்று ,அவரின் காதலனிடம் உடனே தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்டார் .

ஆனால் அந்த காதலன் அதை  கேட்டு அதிர்ச்சியடைந்தார் .மேலும் இப்போது கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி ,அவரின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க ஒரு நர்சிடம் கூட்டி  சென்றார் .அப்போது அந்த நர்ஸ் அந்த கருவை கலைக்க 10000 ரூபாய் பணம் கேட்டார் .உடனே அந்த காதலன் அந்த பெண்ணிடம் 10000 ரூபாய் பணம் ஏற்பாடு செய்து விட்டு வருமாறு கூறினார் .அதை  கேட்ட அந்த பெண் வீட்டிற்கு சென்று ஏதாவது நகையை விற்று கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார் .ஆனால் அவரால் அந்த பணத்தை தயார் செய்ய முடியவில்லை .இதற்கிடையே அந்த பெண்ணின் வயிற்றில் கரு வளர்ந்து கொண்டே போனது .இதனால்  அந்த காதலன் அந்த பெண்ணை கொன்று விட தீர்மானித்தார் .இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 21மத்தேதி அவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார் .ஆனால் அந்த பெண் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார் .பின்னர் சனிக்கிழமையன்று அந்த பெண்ணை கொன்று ,அவரின் உடலை  சோன் ஆற்றங்கரையில் புதைத்து  விட்டார் .பின்னர் போலீசுக்கு இந்த கொலை பற்றி தகவல் தெரிந்து அவரின் சடலத்தினை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார் .பிறகு அவரின் காதலன்  கைது செய்யப்பட்டார்

காதலிக்கு கல்யாண ஆசை -காதலனுக்கு கலைக்க ஆசை -கடைசியில் நடந்த சோகம் .