காதலிக்காக காத்திருப்பேன்: காதலுக்காக அம்மாவை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம்!

 

காதலிக்காக காத்திருப்பேன்: காதலுக்காக அம்மாவை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம்!

‘எத்தனை வருடமாக இருந்தாலும் தேவிப்பிரியாவுக்காக காத்திருப்பேன்” என்று காதலுக்காக அம்மாவைக் கொன்ற தேவிப்பிரியாவின் காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவள்ளூர்: ‘எத்தனை வருடமாக இருந்தாலும் தேவிப்பிரியாவுக்காக காத்திருப்பேன்” என்று காதலுக்காக அம்மாவைக் கொன்ற தேவிப்பிரியாவின் காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதி ஆஞ்சநேயபுரம் எட்டாவது தெருவைச் சேர்ந்த திருமுருகநாதன் -பானுமதியின் இளையமகள் தேவிப்பிரியா. இவர் இந்துக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தேவிப்பிரியா ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கல்லூரி  விழாவில் அறிமுகமான  சித்தூர் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். 

இதையடுத்து தனது காதல் குறித்து தன்  அம்மாவிடம் தேவிப்பிரியா கூறியுள்ளார். தனது மகளின் விருப்பத்தை ஒத்துக் கொண்டுள்ளார் பானுமதி. சில நாள்கள் கழித்து சுரேஷ் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அப்பா அம்மா என்ன வேலை செய்கிறார்கள் எந்த சமூகம் என்று கேட்டிருக்கிறார். அப்போது, சுரேஷ் என்ன சமூகம் என்பதை தெரிந்து கொண்ட பானுமதி, திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த  தேவிப்பிரியா,  சுரேஷிடம் நம்முடைய காதலுக்கு எனது அம்மா எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று  சொல்ல, உனது அம்மாவை கொலை செய்துவிடு என்று சுரேஷ் ஐடியா கொடுத்துள்ளார். 

mother

 

இதையடுத்து, தனது நண்பர் விவேக் மற்றும் விக்னேஷ், அஜித்குமார் ஆகியோருடன் சேர்ந்த தனது அம்மாவை கொலை செய்ய தேவிப்பிரியா திட்டம் தீட்டினார். அதன்படி பானுமதி வாயை பொத்திய கும்பல் அவரை சரமாரியாக குத்தியது. பானுமதியின் அலறல்  கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் அந்த கும்பலை பிடித்து அடித்து உதைத்தனர். இதன் பின்னர் 108 மூலமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பானுமதி சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.

இதையடுத்து, தேவிப்பிரியா மற்றும் அவரது  காதலன் சுரேஷயை காவல்துறையினர் கைது செய்தனர். பானுமதி கொலை வழக்கில் சுரேஷ் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில், ‘எத்தனை வருடமாக இருந்தாலும் தேவிப்பிரியாவுக்காக காத்திருப்பேன். நான் அவளை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.