காதலர் தின குலுக்கு சீட்டில் ரூ.5 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு வென்ற 23 வயது பெண்!

 

காதலர் தின குலுக்கு சீட்டில் ரூ.5 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு வென்ற 23 வயது பெண்!

காதலர் தின குலுக்கு சீட்டில் இந்திய மதிப்பில் ரூ.5 கோடிக்கும் மேல் மதிப்புடைய பண்ணை வீட்டை 23 வயது பெண் ஒருவர் வென்றுள்ளார்.

லண்டன்: காதலர் தின குலுக்கு சீட்டில் இந்திய மதிப்பில் ரூ.5 கோடிக்கும் மேல் மதிப்புடைய பண்ணை வீட்டை 23 வயது பெண் ஒருவர் வென்றுள்ளார்.

இங்கிலாந்தில் காதலர் தின ஸ்பெஷலாக குலுக்கு சீட்டு விற்பனை நடந்தது. இதில் ஒரு டிக்கெட்டை வெறும் 2 பவுண்டு ஸ்டெர்லிங் (இந்திய மதிப்பில் ரூ.186) கொடுத்து ஜெம்மா நிக்ளின் என்ற 23 வயது பெண் வாங்கினாள். அந்த டிக்கெட்டிற்கு 545,000 பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ.5 கோடிக்கும் மேல்) மதிப்புடைய பண்ணை வீடு பரிசாக கிடைத்துள்ளது. ஷார்ப்ஷையரில் அந்த பண்ணை வீடு உள்ளது. இதில் நான்கு பிரம்மாண்டமான படுக்கையறைகள் உள்ளன. மேலும் இந்த வீடு 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

ttn

இந்த பரிசு காரணமாக ஜெம்மா நிக்ளின் மற்றும் அவரது குடும்பத்தினர் அளவில்லாத மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் முதலில் ஜெம்மாவின் குடும்பத்தினர் தான் 10 குலுக்கு சீட்டுகளை வாங்கினர். அதற்கு பிறகு அவர்களது வற்புறுத்தலின் பேரில் போனால் போகிறதென்று 2 டிக்கெட்டுகளை ஜெம்மா வாங்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு அடித்த அதிர்ஷ்டத்தால் தனது முதல் வீட்டை வெறும் 2 பவுண்டு ஸ்டெர்லிங் பணத்தில் வாங்கியிருக்கிறார்.