காதலருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா

 

காதலருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா

டிசம்பரில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. 

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

nayan

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். நயன்தாரா தனது காதலருடன் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று தனது விடுமுறையைக் கழித்து வருகிறார். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களைத் தவறாமல் விக்னேஷ் சிவன் பதிவு செய்து வருகிறார். இவர்களின் புகைப்படத்தைக் காணும் ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் , சீக்கிரமாக இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று  வரும் டிசம்பரில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

 

nayan

இந்நிலையில் நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினர். கோவில் வளாகத்தில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடியை கண்ட ரசிகர்கள் அவர்களுடன் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.