காதலருடன் சென்று அத்தி வரத்தரை தரிசனம் செய்த நயன்தாரா 

 

காதலருடன் சென்று அத்தி வரத்தரை தரிசனம் செய்த நயன்தாரா 

நடிகை நயன்தாரா தனது காதலருடன் சென்று அத்தி வரத்தரைதரிசனம் செய்துள்ளார். 

காதலருடன் சென்று அத்தி வரத்தரை தரிசனம் செய்த நயன்தாரா 

சென்னை: நடிகை நயன்தாரா தனது காதலருடன் சென்று அத்தி வரத்தரை தரிசனம் செய்துள்ளார். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நின்ற கோலத்தில் இருக்கும் அத்தி வரத்தரை பல கோடி பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். அத்தி வரதரின் கடைசி நாள் தரிசனமான 17-ந்தேதி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகக் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 

இந்த நிலையில் தரிசிக்க நடிகை நயன்தாரா தனது காதலருடன் காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் இருந்த பக்தர்கள் நயன்தாராவைப் பார்த்ததும் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.