காதலன் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலி! 

 

காதலன் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலி! 

சென்னையில் ஆபாசமான வார்த்தையால் காதலன் திட்டியதால் மனமுடைந்த காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காதலன் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலி! 

சென்னையில் ஆபாசமான வார்த்தையால் காதலன் திட்டியதால் மனமுடைந்த காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார்- பவானி. இவர்களுக்கு வளர்மதி என்ற பெண் உள்ளார். வளர்மதி சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று மாலை வளர்மதி திடீரென  தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வளர்மதியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தினர். வீட்டையும் சோதனையிட்டர். அப்போது கடிதமொன்று சிக்கியது, அதில் புளியந்தோப்பை சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து வந்ததாகவும், மணிகண்டன் ஆபாசமாக திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் எழுதியிருந்தார்.இதனைகண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மணிகண்டனை கைது செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.