காதலன் ஏமாற்றியதால் பிரபல தெலுங்கு சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 

காதலன் ஏமாற்றியதால் பிரபல தெலுங்கு சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை ஜான்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை : பிரபல தெலுங்கு சீரியல் நடிகை ஜான்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை  ஜான்சி. இவர் நடிப்பில் வரும் “பவித்ரா பந்தம்” என்ற சீரியல் மிகவும் பிரபலமானதாகும். இவருக்கு சூர்யா என்பவருடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அந்த நட்பு  காதலாகமலர்ந்தது. ஆனால், சூர்யா-ஜான்சி காதலுக்கு அவர்களது பெற்றோர்கள் இரு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே ஜான்சியை விட்டு சூர்யா தனியாக பிரிந்து சென்று விட்டார். 

இதனால் மனமுடைந்த ஜான்சி, ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஹைதராபாத் போலீசார், அவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு அவரது போன் மற்றும் சில விஷயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஜான்சியின் இந்த தற்கொலையால் தெலுங்கு சின்னத்திரை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.