‘காதலனை பிரிந்தது வருத்தம் இல்லை’ : நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!

 

‘காதலனை பிரிந்தது வருத்தம் இல்லை’ : நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!

காதலனை பிரிந்தது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

காதலனை பிரிந்தது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

தெலுங்கில் பிரபல நடிகை லட்சுமி மஞ்சு  தொகுத்து வழங்கும் ஃபிட் அப் வித் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில்  பிரபலங்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில்   நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டார். 

shruti

அதில்,  நீங்கள் காதல் உறவுகளில் சிலமுறை இருந்ததாக வெளிவரும் தகவல்கள் குறித்து கூறுங்கள் என்று லட்சுமி  மஞ்சு கேட்க அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், ‘ஒருமுறை தான் காதல் உறவிலிருந்துள்ளேன். அதுவும் முடிந்துவிட்டது. காதல் பிரிவு எனக்கு வருத்ததை அளிக்கவில்லை.  மாறாக எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்தது. சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன். அவ்வாறு நிகழ்ந்தால் கண்டிப்பாக அறிவிப்பேன்’ என்று வெளிப்படையாகப் பேசினார். 

sruti

இதையடுத்து உங்கள் மனம் கவர என்னென்ன  குணங்கள் அவசியம் என்று கேட்கப்பட்டதற்கு,  ‘நேர்மை, நகைச்சுவை உணர்வு, சுத்தம்’ என்று சரவடியை போட்டு தாக்கினார்