காதலனை நம்பி சென்ற இளம்பெண்! 4 பேருடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காதலன்!!

 

காதலனை நம்பி சென்ற இளம்பெண்! 4 பேருடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காதலன்!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே இளம்பெண்ணை தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே இளம்பெண்ணை தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டமங்கலத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்  நல்லூர் பகுதியிலுள்ள கொசுவர்த்திச் சுருள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே கம்பெனியில் பணிபுரிந்த அருள்ஜோதி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுபின் காதலாக மலர்ந்துள்ளது. இரவு 11 மணியாகியும் வீட்டுக்கு வராததால் அந்த பெண்ணின் உறவினர்கள் கம்பெனிக்கு சென்றுள்ளனர். அப்போது அவர் அருள்ஜோதி என்பவருடன் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இருவரையும் தேடினர். அப்போது விநாயகபுரம் ரயில்வே கேட் பகுதியிலிருந்து அருள்ஜோதி மட்டும் தனியாக வந்துள்ளார்.  அவனை பிடித்து விசாரணை நடத்தியதில், தாங்கள் இருவரும் வீடு நோக்கி வந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கிவிட்டு அந்த பெண்ணை கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். உடனே அந்த பெண்ணை தேடிய உறவினர்கள், தண்டவாளத்திற்கு அருகில் உடலில் பல காயங்களுடன் அந்த பெண்ணை மீட்டுள்ளனர். உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனியாக அழைத்து வந்து அருள்ஜோதி, தனது நண்பர்களுடன் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற தன்னை அடித்து, உதைத்து, தண்டவாளத்திலேயே தரதரவென அவர்கள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறினார். 

பெண்ணின் வாக்குமூலத்தை வைத்து அருள்ஜோதியை போக்சோ உள்ளிட்ட இரு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய  4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.