காதலனுக்கு மட்டுமல்ல கள்ளகாதலனுக்கும் துரோகம் செய்த பெண்: கடைசியில் துண்டாக வெட்டப்பட்ட தலை!

 

காதலனுக்கு மட்டுமல்ல கள்ளகாதலனுக்கும்  துரோகம் செய்த பெண்: கடைசியில் துண்டாக வெட்டப்பட்ட தலை!

கார் திருட துப்பு கொடுக்க மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் ரகசியமாகப் பழகி வந்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த  40 வயதான ராஜபாண்டி என்பவருக்கு  2 மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.கார் கொள்ளையில் ஈடுபட்டு வரும் இவர்  கார் திருட துப்பு கொடுக்க மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் ரகசியமாகப் பழகி வந்துள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபாண்டி காணாமல் போனார். அதே சமயம் அங்குள்ள கல்குவாரி ஒன்றில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று இருந்துள்ளது அது ராஜபாண்டி தான் என்பதை  போலீசார் உத்தி செய்தனர். 

illegal

இதுகுறித்து அவர்  மூன்றாவதாகப் பழகி வந்த பெண்ணிடம் விசாரித்த போது, ராஜபாண்டி என்னுடன் இல்லை அவர் என் மகனின் காதலியுடன் உள்ளார் என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார் அந்த பெண்.  அதாவது  கார் திருட துப்பு கொடுக்கும் அந்த பெண்ணின் மகன் வேலை பார்த்து வரும் எஸ்டேட்டின் அருகில் வசித்து வந்த சித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவரது தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்பு அந்த பெண்ணை அம்மாவிடம் விட்டுவிட்டு மீண்டும் வேலைக்கு சென்றுவிட்டார்.

crime

இதையடுத்து ராஜபாண்டி 4 ஆவதாக சித்ராவை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். மகன் காதலித்து வீட்டுக்கு அழைத்து வந்த பெண்ணை பணத்திற்கு ஆசைப்பட்டுக் கண்டிக்காமல் தனிக்குடித்தனம் நடத்த அனுப்பி வைத்துள்ளார். 

murder

இந்நிலையில் ராஜபாண்டியின் நண்பர்கள் ராமர் மற்றும் சக்திவேல் இருவரும் அவரது வீட்டிற்கு வந்து செல்ல, சித்ராவுக்கு சக்திவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் ராஜபாண்டியின் காதுக்கு செல்ல இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில்,  சித்ரா, சக்திவேல் ஆகியோர் சேர்ந்து ராஜபாண்டியை மடக்கி பிடித்து கையிலிருந்த அரிவாளைப் பறித்து ராஜபாண்டியின் தலையை துண்டாக வெட்டியுள்ளனர். பின்பு சடலத்தைத் தட்டப்பாறை கல்குவாரி குட்டையில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய சக்திவேல் தலைமறைவாகியுள்ள நிலையில் சித்ராவை போலீசார் கைது  செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.