காணாமல் போன 120 மீனவர்கள்: ஆட்சியரிடம் மீட்க கோரி மனு!

 

காணாமல் போன 120 மீனவர்கள்:  ஆட்சியரிடம் மீட்க கோரி மனு!

அதிநவீன தகவல் தொடர்பு கருவிகள்  மூலம் கூட அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை

கன்னியாகுமரி: மீனவர்கள் 120 பேர் மீன் பிடிக்க சென்று காணாமல் போன நிலையில் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு  அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

fishermen

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிலை, தூத்தூர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள், மீன் பிடிக்க கடந்த 15 நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்றனர். அப்போது அரபிக்கடலில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் அண்டை மாநிலங்களில் படகுகளுடன் தஞ்சம் புகுந்தனர். 

fishermen

இருப்பினும் தூத்தூரை சேர்ந்த 120 மீனவர்கள்  என்னவானார்கள் என்பது குறித்து தெரியவில்லை. அதிநவீன தகவல் தொடர்பு கருவிகள்  மூலம் கூட அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தூத்தூர் மண்டல பங்குத் தந்தைகள், காணாமல் போன 120 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அம்மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.