காட்டு மிராண்டிகளின் ஈனத்தனத்திற்கு சரியான தண்டனை : ஆந்திரா என்கவுண்டர் குறித்து நயன்தாரா

 

காட்டு மிராண்டிகளின் ஈனத்தனத்திற்கு சரியான தண்டனை : ஆந்திரா என்கவுண்டர் குறித்து நயன்தாரா

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்ட முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். நேற்று அந்த குற்றவாளிகள் நான்கு பெரும் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குறிப்பாக,பிரியங்கா ரெட்டி எரித்துக் கொல்லப்பட்ட அதே இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ttn

இதற்கு மனித உரிமை ஆணையம் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்தாலும், மக்கள் தரப்பிலிருந்து பிரியங்கா மரணத்திற்கு உடனடியாக நீதி கிடைத்து விட்டது என்று ஹைதராபாத் காவல்துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா “சரியான நேரத்தில் வழங்கப்படும் வீதிக்கு இணையில்லை” என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ttn

அதில், “சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்தக் கூற்று இன்று உண்மையாக இருக்கிறது உண்மையான நாயகர்களால். தெலுங்கான காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்குப் புறம்பாகப் பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதில் அளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தைப் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே, நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என்று அழுத்திச் சொல்வேன். நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல் அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயம் தரும். 

arikai

மனிதம் என்பது அனைவருக்கும் சரிசமமாக மரியாதை தருவதும்,  அன்பு செலுத்துவதும் இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்து கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

nayan

குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத்தர வேண்டும்.  பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர்கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போதுதான் நாம் நிம்மதியாகப் பெருமூச்சுடன் அன்பை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.