காட்டுக்குள் பர்த்டே கொண்டாட்டம்… கண் இமைக்கும் நேரத்தில் கேக்கை அலேக்காக தூக்கி சென்ற குரங்கு: வைரல் வீடியோ!

 

காட்டுக்குள் பர்த்டே கொண்டாட்டம்… கண் இமைக்கும் நேரத்தில் கேக்கை அலேக்காக தூக்கி சென்ற குரங்கு: வைரல் வீடியோ!

கேக் வெட்டி  பாட்டு  பாடி உற்சாகமாக பர்த் டே கொண்டாடியவருக்குக் கடைசியில் காத்திருந்தது அதிர்ச்சி.

சமீப காலமாகப் பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாட வேண்டும் என்று பலரும் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். அதற்காக திரையரங்கில் கொண்டாட்டம், நடுரோட்டில் கேக் வெட்டுவது, இன்னும் சொல்ல போனால் பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவது என டிரெண்டிங்காக செய்து வருகிறார்கள். 

ttn

இந்நிலையில் இளைஞர் ஒருவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் காட்டில் கொண்டாடியுள்ளார். காட்டுக்குள் வைத்து கேக் வெட்டி  பாட்டு  பாடி உற்சாகமாக பர்த் டே கொண்டாடியவருக்குக் கடைசியில் காத்திருந்தது அதிர்ச்சி. அதாவது வெட்டிய கேக்கை எடுத்து நண்பனுக்கு  ஊட்டிவிட முயலும்போது, எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று கேக்கை அலேக்காக தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது. 

இதை சற்றும் எதிர்பாராத அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். இந்த வீடியோவானது  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.