காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ரத்ன அங்கி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ரத்ன அங்கி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் ரத்ன அங்கி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் : நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள 108 வைணவத் திருத்தலங்கள், திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

varathaa

இதில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலும் ஒன்று. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அனுஷ நட்சத்திர தினத்தில் ரத்ன அங்கி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருள்வார்.

 இந்தாண்டிற்கான கார்த்திகை  மாத அனுசம் நட்சத்திர தினமான நேற்று முன்தினம் அன்று, தாததேசிகன் அவதார நாளில், ரத்ன அங்கி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். அதனுடன் பெருந்தேவி தாயார் கல் இளைத்த கிரீடம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

நேற்று முன்தினம் நடந்த ரத்ன அங்கி சேவையில் பெருமாள், தாயார் சமேதமாக சிறப்பு அலங்காரத்தில் கோயில் உள் பிரகாரம் சுற்றி வாகன மண்டபத்தில் எழுந்தருளினார்.

varathaa

அதன் பிறகு பூஜைகள் முடிந்து மதியம், 1:30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை, 6:00 மணிக்கு பெருமாள், திருவடி கோயில் புறப்பட்டு, மீண்டும் கோயிலை சென்றடைந்தார். 

அதனை தொடர்ந்து இரவு, 8:00 மணியில் இருந்து இரவு, 12:00 மணி வரை சாற்றுமுறை நடைபெற்றது. பெருமாள், ரத்ன அங்கி அலங்காரத்தில், ஆண்டுக்கு இரு முறை எழுந்தருள்வார்.

கார்த்திகை மாத அனுஷ நட்சத்திரத்தினை தொடர்ந்து  அடுத்ததாக, வைகுண்ட ஏகாதசி அன்றும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இன்றைய தினம் பகல் பத்து உற்சவம் துவங்குவதால் அதற்கான ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக கோயில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.