காஞ்சிபுரத்தில் மக்களிடம் கொரோனா சோதனை செய்த 7 பேருக்கு கொரோனா உறுதி

 

காஞ்சிபுரத்தில் மக்களிடம் கொரோனா சோதனை செய்த 7 பேருக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரத்தில் கொரோனா சோதனையில் ஈடுபட்ட 7 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கொரோனா சோதனையில் ஈடுபட்ட 7 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. அத்துடன் கொரோனா நோய்க்கு இதுவரை தமிழகத்தில் 74 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக எப்போதும்போல சென்னையில் 332 பேருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனைக்காக காஞ்சிபுரத்தில் மக்களிடம் சளி மாதிரிகளை சேகரித்து ஈடுபட்ட 7 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று களத்தில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்னணி சுகாதார பணியாளர்களுக்கு தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்று பரவி வருவது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.