காஜலுக்கு நேற்று யாருமே பிரியாணி கொடுக்கவில்லையாம் பா..!

 

காஜலுக்கு நேற்று யாருமே பிரியாணி கொடுக்கவில்லையாம் பா..!

பிரபல தனியார் தொலைக்காட்சி மூலம், தொகுப்பாளினியாக அனைவராலும் அறியப்பட்டவர் காஜல்.

பிரபல தனியார் தொலைக்காட்சி மூலம், தொகுப்பாளினியாக அனைவராலும் அறியப்பட்டவர் காஜல். சின்னதிரையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்ததால், சீரியல்,மற்றும் திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சில விமர்சனங்களைச் சந்தித்தார்.பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் எந்த எதிர்மறையான விமர்சனங்களையும் சந்திக்காமல் வெளியேறினார். 

kajal

இவரும் பிரபல நடன இயக்குநர் சாண்டியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தங்களுடைய திருமண வாழ்க்கையை விவாகரத்து செய்து கொண்டனர்.காஜலை பிரிந்ததும் சாண்டி,தன்னுடைய தீவிர ரசிகை சில்வியா என்பவரைக் காதலித்து 2017ம் திருமணம் செய்து கொண்டார்.

இவர் எப்போதும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக தனது ரசிகர்களிடம் உரையாடிக் கொண்டே இருப்பார். அந்த வகையில் நேற்று ரம்ஜான் தினத்தை முன்னிட்டு நேற்று அவரது ரசிகர் ஒருவர், பிரியாணி சாப்பிட்டீங்களா? என்று கேள்வி கேட்டிருந்தார். 

kajal

அதைப் பார்த்த காஜல் ‘எனக்கும் யாருமே கொடுக்கவில்லை’ என்று மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.