காச நோய் இல்லாத சூழலை உருவாக்குவோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

 

காச நோய் இல்லாத சூழலை உருவாக்குவோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

2025-ம் ஆண்டுக்குள் காச நோய் இல்லாத சூழலை உருவாக்குவோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை: 2025-ம் ஆண்டுக்குள் காச நோய் இல்லாத சூழலை உருவாக்குவோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2025-ல் காசநோய் இல்லாத சூழலை கொண்டு வருவோம். 0.46 என்ற அளவில் உள்ள தொழுநோயை இல்லாமல் ஆக்குவோம். 

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் மருத்துவ சேவையில் மதுரை 2-வது தலைநகரமாக மாறும். உணவு பாதுகாப்பு விழிப்புணர்வில் இந்தியாவிலேயே தமிழகம் சிறப்பாக செயல்பட்டதற்கான விருது வழங்கப்பட்டுள்ளது என்றார்.