காசு வாங்கிய நாயே! ஓட்டுப்போட்டாயா? தோற்றுப்போன வேட்பாளரின் குமுறல் நோட்டீஸ்

 

காசு வாங்கிய நாயே! ஓட்டுப்போட்டாயா? தோற்றுப்போன வேட்பாளரின் குமுறல் நோட்டீஸ்

பணம் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கிய வேட்பாளருக்கு பட்டை, நாமம் கொடுத்து சென்ற கிராமத்தினரை திட்டி தோற்றுப்போன வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான  91,975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில்  76.19 %  வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகியது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி நேற்று மாலைவரை நடைபெற்றது.  இதில் திமுக கூட்டணி மாவட்ட கவுன்சிலர் பதவியிலும், ஊராட்சி ஒன்றியத்துக்கான பதவிகளிலும் அதிகமான வாக்குகள் வெற்றி வெற்றிப்பெற்றது. 

vote

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழப்பனையூர் கிராமத்தை கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு வேட்பாளர் தன்னிடம் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடாத வாக்காளர்களை திட்டி ‘காசு வாங்கிய நாயே, ஓட்டு போட்டாயா’ என போஸ்டர் அடித்து அந்த பகுதி முழுவதும் ஒட்டியுள்ளார்.