காசுக்கு ஆசைப்பட்டவங்க அநியாயமா கொன்னுட்டாங்க.. வயிறு எரியுது-சேரன்
இயக்குநர் சேரன் நடிப்பில் சனவரி 24 ஆம் தேதி வெளியான படம் ராஜாவுக்கு செக். சாய் ராஜ்குமார் எழுதி இயக்கிய இந்தப் படத்தை, மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்திருந்தனர்.
சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் உள்பட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்த போதிலும், வசூல் பெறவில்லை.
ராஜாவுக்கு ஜெக் திரைப்படத்தைப் பாராட்டி பெண்மணி ஒருவர் நேற்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில் அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை… எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டங்கம்மா…. அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க… வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு… என்று கூறியிருந்தார்.
அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை… எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டங்கம்மா…. அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க… வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு… https://t.co/FmU3WEpt2e
— Cheran (@directorcheran) March 19, 2020
இதற்கு பதிலளித்த அப்பெண், உண்மைதான் சார்.. படம் நல்லபடியாக ரீச்சாகி இருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்… இன்னும் பத்து வருடங்கள் கழித்து “ராஜாவுக்கு செக்”
படம்போல வருமான்னு பேசுவாங்க… என்று தெரிவித்திருந்தார்.
உண்மைதான் சார்..நல்லபடியாக Reachசாகி இருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்…
இன்னும் பத்து வருடங்கள்
கழித்து “ராஜாவுக்கு செக்”
படம்போல வருமான்னு பேசுவாங்க…?— Jegatha (@p_jegatha) March 19, 2020