காசி மகாகல் எக்ஸ்பிரஸ் சிவனுக்கு நிரந்தர சைட் அப்பர் பெர்த் ஒதுக்கீடு!

 

காசி மகாகல் எக்ஸ்பிரஸ் சிவனுக்கு நிரந்தர சைட் அப்பர் பெர்த் ஒதுக்கீடு!

வாரணாசி – இந்தூர் இடையே காசி மகாகல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

வாரணாசி – இந்தூர் இடையே காசி மகாகல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இந்த ரயிலில் பி5 கோட்சில் 64வது சீட் நம்பரில் சிவனுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. சைட் அப்பர் பெர்த்தில் வண்ணமயமான காகிதங்கள் ஒட்டப்பட்டு, சிவன் உள்ளிட்ட கடவுளின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ttn

முதல் நாள் பயணத்துக்காக பிரத்தியேமாக இந்த கோவில் அமைக்கப்பட்டது என்று பயணிகள் கருதினர். ஆனால், பி5ல் 64வது படுக்கையானது நிரந்திரமாக சிவாலயமாக செயல்படும். அந்த படுக்கை சிவனுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது. பொது மக்கள் அந்த இடத்தை முன்பதிவு செய்ய தடைவிதிக்கப்பட்டு, பிளாக் செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.