காசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!

 

காசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!

அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 1477 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஆனால், 411 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள 80% பேர் குணமடைந்து வருவதாகவும், அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

ttn

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தந்த மாநில அரசு ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை தளர்க்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து காசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.