‘காசிக்குப் போகும் சந்நியாசி உன் கட்சி என்னாகும் நீ யோசி’… முழு காவியாக மாறிய ஓ.பி.எஸ்…

 

‘காசிக்குப் போகும் சந்நியாசி உன் கட்சி என்னாகும் நீ யோசி’… முழு காவியாக மாறிய ஓ.பி.எஸ்…

பழைய பன்னீர் செல்வமாக மாறி காவிக்குத் தாவ மிக உறுதியான முடிவை எடுத்துவிட்டார் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள் அரசியல் ஆருடர்கள்.

‘ஓ.பி.எஸ். விரைவில் பி.ஜே.பி.க்குத் தாவி விடுவார்’ என்று தங்கத்தமிழ்ச் செல்வன் சொன்ன கருத்தை முட்டாள்தனமானது என்று அவர் மறுத்தாலும், அவர் பழைய பன்னீர் செல்வமாக மாறி காவிக்குத் தாவ மிக உறுதியான முடிவை எடுத்துவிட்டார் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள் அரசியல் ஆருடர்கள்.

fsD

மோடி வாரணாசியில் மனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்பே போய் அவரை குறுக்கு வழியில் சந்தித்ததை எடப்பாடி உட்பட அ.தி.மு.க.வினர் யாரும் விரும்பவில்லை. அதற்கு சப்பைக்கட்டாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவே முதல் நாளே போனேன் என்று சொன்னதை ‘இட்லின்னு சொன்னா சட்னியே கூட நம்பாது என்கிற அளவுக்குத்தான் அனைவரும் எடுத்துக்கொண்டார்கள்.

ஓ.பி.எஸ்.சின் வாரணாசிப் பயணம் அவரது இன்னொரு ‘தர்ம யுத்தம்’ தான் என்றும் எடப்பாடியுடன் இணைந்து வண்டி ஓட்ட முடியாததை மோடிக்கு முழுசாக விளக்கி, தன்னை பி.ஜே.பியில் இணைத்துக்கொள்ளும்படி கெஞ்சியதும்தான் அவரது பயணத்தின் நோக்கமாம்.

DDdv

அதே போல் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக ஜெயிக்க 100 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று நிதர்சனத்தை எடுத்துக்கூறிய ஓ.பி.எஸ். தன்னையும் தேர்தலில் போட்டியிடும் தனது மகனையும் காக்கவே வாரணாசியில் மீண்டும் ஒரு தர்ம யுத்தம் நடத்திவிட்டு வந்திருக்கிறார் என்கிறது அரசியல் வட்டாரம்.ஆக தற்போதைக்கு பார்ட் டைம் காவியாக மாறியிருக்கும் ஓ.பி.எஸ். தேர்தல் முடிவுகள் வந்தவுடன் முழுசாக சந்திரமுகியாகவே மாறிவிடுவாராம்.