காங்கோவில் ரயில் தடம்புரண்டு 50 பேர் பலி! 

 

காங்கோவில் ரயில் தடம்புரண்டு 50 பேர் பலி! 

காங்கோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில்  சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

train

டாங்கான்கியா மாகாணத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்தையடுத்து தண்டவாளங்கள் சேதமடைந்தன. அப்பகுதி வழியாக ரயில் போக்குவரத்து முடங்கியது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்கள் தண்டவாளங்களுக்கு இடையே சிக்கியவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.  படுகாயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.