காங்கிரஸ் போல வஞ்சிக்காதே; முத்துராமலிங்கத் தேவர் பெயர் வேண்டி பறக்கும் விமானத்தில் போராட்டம்

 

காங்கிரஸ் போல வஞ்சிக்காதே; முத்துராமலிங்கத் தேவர் பெயர் வேண்டி பறக்கும் விமானத்தில் போராட்டம்

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என சமீப கலமாக முக்குலத்தோர் சமுதாயத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேவர் பக்தப் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, பாரதிய பார்வேர்ட் ப்ளாக் கட்சி ஆகியவை இதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க சொல்லி முக்குலத்தோர் சமுதாயத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக பறக்கும் விமானத்தில் போராட்டம் நடத்தி பயணிகளை அச்சுறுத்தியிருக்கிறார்கள்.

தேவர்

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என சமீப கலமாக முக்குலத்தோர் சமுதாயத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேவர் பக்தப் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, பாரதிய பார்வேர்ட் ப்ளாக் கட்சி ஆகியவை இதில் தீவிரம் காட்டி வருகின்றனர். முன்பு மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்டு பலர் கைதானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று பறக்கும் விமானத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மதுரை

சென்னையில் இருந்து மதுரை சென்ற இன்டிகோ விமானத்திற்குள் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் முருகன் ஜி தலைமையில் பயணிகள் போல போராட்டக்காரர்கள் பயணித்துள்ளனர். விமானம் திருச்சியை கடந்தபோது, காங்கிரஸ் போல வஞ்சிக்காதே விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

அரசு

இதனால் விமானத்தில் வந்த பயணிகள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து மதுரை மற்றும் சென்னை விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். விமானம் மதுரையை அடைந்ததும், முருகன் ஜி உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேரும் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக கூடிய மக்களை காவல்துறையினர் தடியடி மூலம் கலைத்தனர்.

 

இதையும் வாசிங்க: தோல்வி பயத்தில் ஜோதிமணிக்கு கொலை மிரட்டல்; கத்தியை காட்டிய இளைஞர்களால் பரபரப்பு?