காங்கிரஸ் பிரமுகர் கொலை… பாஜக வர்த்தக அணி தலைவர் கைது..!?

 

காங்கிரஸ் பிரமுகர் கொலை… பாஜக வர்த்தக அணி தலைவர் கைது..!?

புதுவையில் டாப் டென் ரவுடிகளில் ஒருவரான சோழன் என்பவர் தான் அந்த கொலையை செய்யச் சொல்லியதாக வாக்கு மூலம் அளித்தனர். 

கடந்த ஆண்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் வெட்டி படுகொலை செய்யப் பட்டார். அந்த கொலையில் முக்கிய பங்கு வகித்த காலாட்டுப்பட்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகர், கடந்த 23 ஆம் தேதி தனது மனைவியுடன் வெளியே சென்றிருந்த போது சுகன் என்பவர் தலைமையிலான ரவுடி கும்பல் அவரை வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். 

அதனையடுத்து, சந்திரசேகரை கொலை செய்த சுகன் மற்றும் அவரது கூட்டாளிகள் புதுவை நீதிமன்றத்தில் தானாக வந்து சரணடைந்தனர். அதன் பின், அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, புதுவையில் டாப் டென் ரவுடிகளில் ஒருவரான சோழன் என்பவர் தான் அந்த கொலையை செய்யச் சொல்லியதாக வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

BJP Member Sozhan

இதனையடுத்து, பாஜக வர்த்தக அணி தலைவரான சோழனையும் அவரது கூட்டாளிகளையும் சேர்த்து  புதுவை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ஜோசப்பின் உறவினர்கள் தான் சந்திரசேகரை கொலை செய்திருப்பார் என்று விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது பாஜக பிரமுகரான சோழன் கைதாகி இருப்பது பெரும் குழப்பத்தை அப்பகுதி மக்களிடையேயும் காவல் துறையினரிடையும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும்,  இந்த வழக்கில் சோழனிடம் காவல் துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.