காங்கிரஸ் பிரமுகரை ரவுடிகளை வைத்து கொலை செய்த பாஜக நிர்வாகி! 

 

காங்கிரஸ் பிரமுகரை ரவுடிகளை வைத்து கொலை செய்த பாஜக நிர்வாகி! 

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். காங்கிரஸ் பிரமுகரான இவர் கடந்த 23-ந்தேதி தனது மனைவியுடன் சென்ற போது ரவுடி சுகன் தலைமையிலான கும்பல் சந்திரசேகர் மீது வெடிகுண்டு வீசியும், கொடூரமாக வெட்டியும் கொலை செய்தது.

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். காங்கிரஸ் பிரமுகரான இவர் கடந்த 23-ந்தேதி தனது மனைவியுடன் சென்ற போது ரவுடி சுகன் தலைமையிலான கும்பல் சந்திரசேகர் மீது வெடிகுண்டு வீசியும், கொடூரமாக வெட்டியும் கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதையடுத்து சுகன் மற்றும் அவரது கூட்டாளிகள் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

Murder

இதையடுத்து சுகன் மற்றும் அவரது கூட்டாளிகளை காலாப்பட்டு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த சோழன் என்பவர் உத்தரவின் பேரில் சந்திரசேகரை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார். இதை தொடர்ந்து சோழனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  மேலும் அவனது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சோழன், புதுச்சேரி மாநில பாஜக வர்த்தக அணி தலைவர் ஆவார்.