காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமான ஜெயலலிதாவின் பள்ளித் தோழி

 

காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமான ஜெயலலிதாவின் பள்ளித் தோழி

ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர் சையத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். 

சென்னை: ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர் சையத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித் தோழியான பதர் சையத், அதிமுகவில் செல்வாக்கு நிரம்பியவராக வலம் வந்தவர். SITE மகளிர் கல்லூரியின் நிரந்தர உறுப்பினராக இருக்கும் இவர், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும் இருந்துள்ளார். அதேபோல், வக்பு வாரிய தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 

ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அதிமுகவில் செல்வாக்கு நிரம்பிய பிரமுகராக வலம் வந்த இவர், அவரின் மறைவுக்குப் பின் அதிமுக நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபடாமல் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில், அக்கட்சியில் பதர் சையத் இணைந்துள்ளார். இதனையடுத்து, நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக இவர் போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.