காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி அன்பரசு மர்மமான முறையில் மரணம்

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி அன்பரசு மர்மமான முறையில் மரணம்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி அன்பரசு திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி அன்பரசு திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது 2 வழக்குகள் உள்ளன. இவருடைய மகன்  சொத்துக்காகவும், வழக்காகவும் அன்பரசுவை கொலை செய்ததாக அவரது சகோதரி சுமதி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவரை வீட்டில் அடைத்து வைத்து யாரையும் பார்க்க விடாமல் கொடுமைப்படுத்தியதாகவும் தகவல்
கள் தெரிவிக்கின்றன. 

காங்கிரஸ் முன்னாள் எம்பி அன்பரசு, ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளை செலவுக்காக, பைனான்சியரிடம் 35 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதைத் திரும்ப காசோலையாகக் கொடுக்க அந்த காசோலை திரும்பியுள்ளது. இதனையடுத்து பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா அன்பரசு, அவரின் மனைவி கமலா அன்பரசு அறக்கட்டளை நிர்வாகி மணி ஆகியோருக்கு எதிராக  2008ல் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார்.