காங்கிரஸ் கட்சியினர் நீதித்துறையை மிரட்டுகின்றனர்: பிரதமர் மோடி

 

காங்கிரஸ் கட்சியினர் நீதித்துறையை மிரட்டுகின்றனர்: பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியினர் நீதித்துறையை மிரட்டுகின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லி: காங்கிரஸ் கட்சியினர் நீதித்துறையை மிரட்டுகின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்திற்கு டிசம்பர் 7-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 200 தொகுதிகளை கொண்டிருக்கும் ராஜஸ்தானை தக்கவைக்க பாஜகவும், பாஜகவை வீழ்த்தி அரியணையில் ஏற காங்கிரஸ் கட்சியும் தீவிர செயல்பாடுகளில் இறங்கியுள்ளன. இரண்டு கட்சிகளும் தங்களது பிரசாரத்தை வேகப்படுத்தியுள்ளன.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில்  பிரதமர் மோடி இன்று ராஜஸ்தானில் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. அவர்கள் மரியாதை என்பதையே மறந்துவிட்டனர். பின்தங்கிய சமுதாயத்தினரை காங்கிரஸ் வாக்கு வங்கியாக பயன்படுத்தி வந்தது. டாக்டர் அம்பேத்கருக்கு அக்கட்சி பாரத ரத்னா வழங்கி கவுரவிக்கவில்லை.

காங்கிரஸ் நீதித்துறையை அரசியலில் இழுக்கிறது. நீதித்துறைக்கு ஒரு பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அக்கட்சி தலைவர் ஒருவர், 2019 தேர்தல் வருவதால், அயோத்தி வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்கிறார். அந்த கோரிக்கை நீதிபதி ஏற்காதபோது, கண்டன தீர்மானம் கொண்டுவரப்படும் என நீதித்துறையை மிரட்டுகின்றனர். எந்த பயமும் இல்லாமல், நீதியின் பாதையில் நடக்க வேண்டும் என நீதித்துறையை கேட்டு கொள்கிறேன்  என்றார்.