காங்கிரஸுக்கு இதைவிட பெரிய அசிங்கம் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்!

 

காங்கிரஸுக்கு இதைவிட பெரிய அசிங்கம் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை சுங்கச்சாவடி எண்ணூர் விரைவு சாலை பகுதியில் தெரு விளக்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டார்.

காங்கிரஸுக்கு இதைவிட பெரிய அசிங்கம் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை சுங்கச்சாவடி எண்ணூர் விரைவு சாலை பகுதியில் தெரு விளக்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ வடசென்னைக்கு நுழைவாயிலாக எண்ணூர் விரைவு சாலை செயல்படுகிறது. அதை அமைத்ததே அதிமுக அரசு தான்,  பொய் சொல்வதே எதிர்கட்சிக்கு வாடிக்கையாகிவிட்டது. தெருவிளக்குக்காக 724 கம்பங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. அந்த பணிகள் 2 மாதத்திற்குள் முடியும். 

காரைக்காலில் சேதம் அடைந்த படகிற்கு நிவாரணம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, 2 படகுகளை மீட்க 2 நாட்களாக தொடர்ச்சியாக அரசு முயற்சித்துவருகிறது. சாத்தான் வேதம் ஊதுவது போன்று ஸ்டாலின் பேசிவருகிறார்.  மடியில் கனம் இல்லை என்றால் சிதம்பரம் ஒளிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சமூக வலைத்தளங்களில் பா.சிதம்பரம் தலை மறைவு என்று வருகிறது. இதை விட அசிங்கம் காங்கிரஸ் மற்றும் திமுகவிற்கு இல்லை என்றும் தெரிவித்தார். 

ஜெயலலிதா உடல்நிலை மோசமடைந்ததற்கு காரணம் திமுக தான். எந்த பள்ளிகளையும் மூடும் எண்ணம் அரசிற்கு இல்லை” என்று தெரிவித்தார்.