கவலைப்படாதீர்கள்! வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ரஜினிகாந்த் அட்வைஸ்

 

கவலைப்படாதீர்கள்! வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ரஜினிகாந்த் அட்வைஸ்

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும்  ஊரடங்கு வரும் 3 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள  நிலையில் மக்கள் ஊரடங்கை மீறி வெளியில் செல்லாமல் இருக்க  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ttn

ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில்,  “வெளி நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இந்த புதிய ஆண்டு, இனிய ஆண்டாக இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். கொரோனா வைரஸால் உலகமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதற்கு இந்தியாவும் தமிழ்நாடும் விதிவிலக்கு அல்ல. உங்களை பிரிந்து இந்தியாவில்  வாழும் உங்கள் உறவினர்கள், குடும்பத்தினர்களுகு எந்நேரமும் உங்களை பற்றியே கவலை கொண்டுள்ளனர்.

 

 

எனவே நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்நாட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். இதுதான் உங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய பரிசு. நலமுடன் வாழுங்கள். கவலைப்படாதீர்கள். இதுவும் கடந்து போகும்” என பேசியிருக்கிறார்.