கவர்னர் ஆனதும் இப்படிச் செய்துட்டாங்களே தமிழிசை… திடீர் முடிவால் கலங்கும் தொண்டர்கள்..!

 

கவர்னர் ஆனதும் இப்படிச் செய்துட்டாங்களே தமிழிசை…  திடீர் முடிவால் கலங்கும் தொண்டர்கள்..!

மூச்சு விடக்கூட மறந்தாலும் ஒன்ற்ஐ மட்டும் அவர் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். ஆனால் தெலங்கானா கவர்னர் ஆனதும் அதில் இருந்து திடீரென விலகி விட்டார் தமிழிசை.

மூச்சு விடக்கூட மறந்தாலும் ஒன்றை மட்டும் அவர் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். ஆனால் தெலங்கானா கவர்னர் ஆனதும் அதில் இருந்து திடீரென விலகி விட்டார் தமிழிசை. 

 வருகிற 8-ந்தேதி தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார். கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுத்துக்கொண்டார்.Tamilisai

 அவர் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தபோது அவரது முகநூல் கணக்கில் நேரடியாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவரது பேட்டி, கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் அதில் இடம் பெற்றது. மத்திய அரசு மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ட்விட்டரிலே சுடச்சுட பதில் அளிப்பார்.

கட்சியில் இருந்து விலகியதோடு இப்போது சமூக வலைதளங்களான முகநூல், ட்விட்டர் பக்கங்களில் இருந்தும் விலகி உள்ளார்.  இதனால் அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும், ரசிகர்களும், மீம்ஸ் கிரியேட்டர்களும், சமூக வலைதளவாசிகளும் கலங்கித் தவிக்கின்றனர்.