கவர்ச்சி போலீசாக களமிறங்கியுள்ள சர்ச்சை நாயகி!
நடிகை கஸ்தூரி புதிய படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகை கஸ்தூரி புதிய படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்கு பெயர் போன நடிகை கஸ்தூரி இயக்குநர் சலங்கை துரை இயக்கத்தில் உருவாகி வரும் இ.பி.கோ 302 என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சலங்கை துரை ஏற்கனவே நடிகர் கரண் நடிப்பில் வெளியான காத்தவராயன் இயக்கியவர். இப்படத்தில் அறிமுக நடிகர்களான நாக சக்தி, வர்ஷிதா, வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர்.
முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வரும் நடிக்கும் கஸ்தூரி துர்கா ஐ.பி.எஸ் என்ற வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்குத் தண்டபாணி ஒளிப்பதிவு செய்ய முத்துவிஜயன் என்பவர் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இ.பி.கோ 302 படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Here it is ! First look of #EPCo302 #IPC302. Excited to play a cop for the very first time.
இபிகோ302 திரைப்படத்தில் எனக்கு முதன்முதலாக போலீஸ் சீருடை !Thank you director @SalangaiDuraiss
best wishes to @leopraboo @mounamravi @Pro_Bhuvan @sakkthiactor pic.twitter.com/XbxMVM8cnf— Kasturi Shankar (@KasthuriShankar) April 22, 2019
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள், முடியும் தருவாயில் உள்ளதால் படத்தின் வெளியீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்க: இளைய தளபதி விஜய் படப்பிடிப்பு ரத்து…உயிருக்கு ஊசலாடும் எலெக்ட்ரிஷியன்!?