கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்ட உதவி காவல் ஆய்வாளர்: காரணம் இதுதானாம்!

 

கழுத்தறுத்து  தற்கொலை செய்து கொண்ட உதவி காவல் ஆய்வாளர்: காரணம் இதுதானாம்!

உதவி ஆய்வாளர் சேகர் கத்தியால் கழுத்தை அறுத்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை:  உதவி ஆய்வாளர் சேகர் கத்தியால் கழுத்தை அறுத்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் சேகர். இவருக்கு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். 

suicide

இந்நிலையில்  கடந்த 4 நாட்களாக சேகர் பயிற்சிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மதுபோதையிலிருந்த உதவி ஆய்வாளர் சேகர் காவலர் குடியிருப்பில் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைஸ் எய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த வடபழனி  போலீசார், சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உதவி ஆய்வாளர் சேகரின் தற்கொலை குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக உதவி ஆய்வாளர் சேகர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.