கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு!

 

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழொற்பேட்டையில் விஷவாயு தாக்கி புட்லூரைச் சேர்ந்த வேலன், சந்துரு ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழொற்பேட்டையில் விஷவாயு தாக்கி புட்லூரைச் சேர்ந்த வேலன், சந்துரு ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

காக்களூரில் உள்ள இரும்பு பொருட்கள் துருப்பிடிக்காமல் இருப்பதற்கான ரசாயனத்தை தயார் செய்யும் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியை புட்லூர் பகுதியை சேர்ந்த வேலவன், சந்துரு ஆகியோர் சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அப்போது இருவரையும் விஷவாயு தாக்கியதில் முச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

இளைஞர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற செவ்வாய் பேட்டை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் தொழிற்சாலையில் பணிபுரிந்த சக ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.