கழிவறையில் கிடந்த நாப்கின்: மாணவிகளிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்ட ஆசிரியர்கள்: உண்மை நிலவரம் என்ன?

 

கழிவறையில் கிடந்த நாப்கின்: மாணவிகளிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்ட ஆசிரியர்கள்: உண்மை நிலவரம் என்ன?

பள்ளிக் கழிவறையில், நாப்கின் கிடந்ததால், ஆடைகளைக் களைந்து ஆசிரியர்கள் இருவர் பள்ளி மாணவிகளைச் சோதனையிட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர்:பள்ளிக் கழிவறையில், நாப்கின் கிடந்ததால், ஆடைகளைக் களைந்து ஆசிரியர்கள் இருவர் பள்ளி மாணவிகளைச் சோதனையிட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஃபாசில்கா மாவட்டத்தின் குந்தால் என்ற கிராமத்தின் அரசு பள்ளியின்  கழிவறையில், நாப்கின் கிடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவிகளின் ஆடைகளை  களைந்து சோதனை செய்துள்ளனர். ஆசிரியர்களின் இந்தக் கொடூர செயலால் மாணவிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதையடுத்து  தங்களுக்கு நேர்ந்த கொடுமையை  மாணவிகள் பெற்றோரிடம் கூறியதை அடுத்து, இப்பிரச்சினை தெரிய வந்தது. இதுகுறித்து வேதனையை வெளியிட்டிருக்கும் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதோடு, இன்று மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.