கழட்டி விட்ட காதலருக்கு டாட்டூ மூலம் பதிலடி கொடுத்த பிரபலம்!

 

கழட்டி விட்ட காதலருக்கு டாட்டூ மூலம் பதிலடி கொடுத்த பிரபலம்!

ஹிந்தி பிக் பாஸ் 13-ல் போட்டியாளர் பராஸ் சாப்ரா மற்றும் ஆகான்ஷா இருவரது காதல்  சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இருவரும் தற்போது பிரிந்து விட்டதாக தெரிகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, ​​பராஸ் தனக்கு ஆகான்ஷாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு அதை முறித்துக்கொள்ள விருப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆகான்ஷா பூரி தனது கையில் புதிய டாட்டூ ஒன்று போட்டுகொண்டுள்ளார். அந்த டாட்டூவை பார்க்கும்போது அவர் தனது காதலரை பிரிந்து விட்டதை உறுதிப்படுத்துவது போல் தெரிகிறது.

paras-chhabra

ஹிந்தி பிக் பாஸ் 13-ல் போட்டியாளர் பராஸ் சாப்ரா மற்றும் ஆகான்ஷா இருவரது காதல்  சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இருவரும் தற்போது பிரிந்து விட்டதாக தெரிகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, ​​பராஸ் தனக்கு ஆகான்ஷாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு அதை முறித்துக்கொள்ள விருப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.

இருப்பினும், ஆகான்ஷா ஒருபோதும் பாராஸைப் பற்றி மோசமாகப் பேசவில்லை, அவர் தனது நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தார். பராஸ்  வந்ததும் பேசிக்கொள்ளலாம் என்று அமைதியை கடைபிடித்தார்.

tattoo

சரி, இப்போது பராஸ் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார், எல்லாவற்றிற்கும் மேலாக, இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆகான்ஷா தனது கையில் ஏற்கனவே தனது காதலர் பேரை பச்சை குத்தியிருந்ததாக தெரிகிறது. இப்பொது பராஸுடன் பிரிந்துவிட்டதால் அதை மறைக்க மற்றொரு டாட்டூ குத்தியுள்ளார். அதில் பார் கோடுகள் போன்ற டாட்டூ இருந்தது. மேலும் நான் நானாகவே இருக்கிறேன் என்றும் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். எனவே காதல் முறிவு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த டாட்டூவை அவர் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பொதுவாக பார்கோடு பச்சை குத்திக்கொள்வது ஒருமித்த கலாச்சாரத்தின்  மீதான எதிர்ப்பைக் காட்டுவதாகும்.