கள்ள காதலியை கொலை செய்துவிட்டு முகத்தில் ஆசிட் ஊற்றிச்சென்ற கொடூரன்!! 

 

கள்ள காதலியை கொலை செய்துவிட்டு முகத்தில் ஆசிட் ஊற்றிச்சென்ற கொடூரன்!! 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காதலியைக் கொலை செய்துவிட்டு, சடலத்தின் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தில் ஆசிட்டை ஊற்றிச்சென்ற கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காதலியைக் கொலை செய்துவிட்டு, சடலத்தின் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தில் ஆசிட்டை ஊற்றிச்சென்ற கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தாராபுரம் அருகே  கடந்த 29 ம் தேதி அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது பெண்ணின் உடலில் காயங்களும், பெண்ணின் முகம் ஆசிட் வீச்சாலும் சிதைக்கப்பட்டிருந்தது. உடனடியாக அந்த சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர். அதன்பின் கொலை செய்யப்பட்ட பெண் யார் என காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவந்தனர். கொலை செய்யப்பட்ட அந்த பெண் தாராபுரம் எல்லப்பநாயக்கன் வலசை சேர்ந்த மகாலட்சுமி என்பது தெரியவந்தது. மகாலட்சுமி அதே பகுதியில் சித்தாள் வேலை செய்துவந்தார். 

Mahalakshmi

கணவரை பிரிந்து தனியாக வசித்துவந்த மகாலட்சுமி, ரஞ்சிதாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற கட்டிட மேஸ்திரியுடன் நெருக்கமாக பழகியது தெரியவந்தது. அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது கடந்த ஒரு ஆண்டாக இருவரும் நெருக்கமாக பழகியதும், கடந்த சில நாட்களாக உறவில் விரிசல் ஏற்பட்டு மகாலட்சுமி தனியாக வசிப்பதும் தெரியவந்தது. இருவருக்கும் ஏற்பட்ட பிரிவால் மகாலட்சுமி கருப்பசாமியை சந்திப்பதை தவிர்த்துவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி, கடந்த மாதம் 29 ஆம் தேதி புதர் மண்டிக் கிடந்த கூடல் மாநகர் மனைப் பிரிவுக்கு மகாலட்சுமியை சாமாதானம் பேசுவதாக கூறி அழைத்து சென்றுள்ளான். அங்குச்சென்ற பின் மதுபோதையிலிருந்த கருப்பசாமி, மகாலட்சிமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், சடலத்தை யாரும் அடையாளம் கண்டுப்பிடித்துவிடக்கூடாது என்பதற்காக ஆசிட் வீசி எரித்ததையும் கருப்பசாமி ஒத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து கருப்பசாமியை கைது செய்த காவல்துறையினர், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.