கள்ளுக்கடைதான், ஆனால் குடும்பத்தோடு போய் சாப்பிடலாம். கேரள அதிசயம்.

 

கள்ளுக்கடைதான், ஆனால் குடும்பத்தோடு போய் சாப்பிடலாம். கேரள அதிசயம்.

கேரளமாநிலம் கோட்டையத்தில் இருந்து வைக்கம் போகும் சாலையில் இருக்கிறது குமரகம்.இங்கிருக்கும் ஆயுர்வேத ஒளஷதாலயங்கள் உலகப் புகழ் பெற்றவை.வாஜ்பாய்கூட இங்கே வந்து சிகிட்சை பெற்றிருக்கிறார். திரைப்பட நட்சத்திரங்களில் நடிகர் விக்கிரமுக்கு மிகவும் பிடித்த இடம் இது.இந்த ஊரில் இருக்கும் படகுத்துறை, பறவைகள் சரணாலயம் தாண்டி வைக்கம் சாலையில் இரண்டு கிலோமீட்டர் பயணித்தால் காலநாட்டின்கர என்கிற இடத்தில் இந்த தரவாடு ரெஸ்டாரெண்ட் வருகிறது. ஒரு பெரிய தோட்டத்துக்குள் அமைந்திருக்கும் இந்த உணவகத்தோடு ஒரு கள்ளுக் கடையும் ஒருக்கிறது.நல்ல இடைவெளி விட்டு வெவ்வேறு வடிவத்தில் உணவுக்கூடங்கள் அமைத்து இருக்கிறார்கள்.

கேரளமாநிலம் கோட்டையத்தில் இருந்து வைக்கம் போகும் சாலையில் இருக்கிறது குமரகம்.இங்கிருக்கும் ஆயுர்வேத ஒளஷதாலயங்கள் உலகப் புகழ் பெற்றவை.வாஜ்பாய்கூட இங்கே வந்து சிகிட்சை பெற்றிருக்கிறார். திரைப்பட நட்சத்திரங்களில் நடிகர் விக்கிரமுக்கு மிகவும் பிடித்த இடம் இது.இந்த ஊரில் இருக்கும் படகுத்துறை, பறவைகள் சரணாலயம் தாண்டி வைக்கம் சாலையில் இரண்டு கிலோமீட்டர் பயணித்தால் காலநாட்டின்கர என்கிற இடத்தில் இந்த தரவாடு ரெஸ்டாரெண்ட் வருகிறது. ஒரு பெரிய தோட்டத்துக்குள் அமைந்திருக்கும் இந்த உணவகத்தோடு ஒரு கள்ளுக் கடையும் ஒருக்கிறது.நல்ல இடைவெளி விட்டு வெவ்வேறு வடிவத்தில் உணவுக்கூடங்கள் அமைத்து இருக்கிறார்கள்.

kerala-hotel-01

காலை 9 மணிக்குப் புதுக்கள் வந்த உடன் கடை திறக்கப்படுகிறது.பிரதான டைனிங்க் ஹாலில் 50 பேர் சாப்பிடலாம். அங்கே கள் குப்பிகளுடன் உங்களுக்கு பிடித்த சைட் டிஷ்களுடன் குடிக்கலாம்.கேரள கள்ளுக்கடைகளில் சைவத் தொடுகறிகள் மிகவும் குறைவு.மிளகாய் சேர்த்து வேக வைத்த கப்பைக் கிளங்கும்,செறுபயறு எனப்படும் பைப்பயறும்தான் எங்கும் கிடைக்கும்.ஆனால்,நான் வெஜ்ஜில் பெரிய பட்டியலே நீட்டுவார்கள்.குடிக்க விருப்பமில்லை சாப்பிட்டால் போதும் என்றால் அங்கிருக்கும் ஏதாவது ஒரு குடிலைத் தேர்ந்தெடுத்து அங்கே இருந்தே ஆர்டர் செய்யலாம். அதில் ஏசி குடில்களும் உண்டு.போர்க்,பீஃப்,நண்டு,கக்கா,கல்லுமக்கா,தராவு மப்பாசு ( தேங்காய் சேர்த்த வாத்துக்கறி) குடல்,மட்டன் ஃபிரை,சிக்கன் 65,கொடுவா,அயிலா,கவல,மத்தி,ஷீலா,என்று விதவிதமான மீன்கள் குழம்பாகவும் ,ஃபிரையாகவும் கிடைக்கும்.

kerala-hotel

இவற்றோடு பெரிய மீன் தலையை அப்படியே முழுதாக போட்டு செய்த மீன் தலைக்கறி,என்று ஏகப்பட்ட அயிட்டங்கள் இருக்கிறது நீங்கள் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்ய.மட்டை அரிசி,சாதாரண அரிசி என இரண்டு வகையான சோற்றுடன்,புளிசேரி,இரண்டு சைவத் தொடுகறிகளும் ரசம்,மோர் கிடைக்கும்,அத்துடன் நீங்கள் மேலே சொன்ன லிஸ்டில் இருந்து எதாவது ஒன்றை ஆர்டர் செய்து கொள்ளளாம்.சிப்பி புழுவை வைத்துச் செய்யப்படும் கல்லுமக்கா தோரன் இந்த உணவகத்தின் சிறப்பு.இதுதவிர புரோட்டோ,புட்டு,ஆப்பம்,குட்டி தோசை,ஏன்,கொஞ்சம் ஸ்ட்ராங்கான இட்லிகூட உண்டு. ஃபுல்கட்டு கட்டிவிட்டு குமரகம் படகுத்துறைக்குப் போய்,காய்லில் ஒரு ரவுண்டு போய்வாருங்கள்.