கள்ளத்தொடர்பு விவகாரம்: மனைவியை திட்டமிட்டு கொலை செய்த ராணுவ வீரர்

 

கள்ளத்தொடர்பு விவகாரம்: மனைவியை திட்டமிட்டு கொலை செய்த ராணுவ வீரர்

கவுதமி உயிரோடு இருக்கும் வரை நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது என ராஜேஷை தூண்டிவிட்டிருக்கிறார் கலைவாணி.

கிருஷ்ணகிரி மாவட்டம், தின்னப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ் (31), அவரது மனைவி கவுதமி (29). இவர்கள்  இருவருக்கும் கடந்த 2012-ஆம் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரும் பெங்களூருவை சேர்ந்த கலைவாணி என்பவரும் கடந்த 1 1/2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு வைத்துள்ளனர். இதை அறிந்த கவுதமி இவர்களை கண்டித்துள்ளார். கவுதமி உயிரோடு இருக்கும் வரை நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது என ராஜேஷை தூண்டிவிட்டிருக்கிறார் கலைவாணி.

women

அவரது பேச்சைக் கேட்டு ராணுவ வீரர் தன் மனைவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக விடுமுறை சொல்லிவிட்டு ஊருக்கு வந்த ராஜேஷ், வீட்டில் குழந்தைகள் இல்லாத வேளையில் கவுதமியை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளார்.

jjhkj

சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கவுதமியின் நகைகளை எல்லாம் எடுத்துச் சென்று சென்னையில் அடகு வைத்திருக்கிறார். திருட வந்தவர்கள் கொலை செய்ததாக நினைக்கட்டும் என கருதியுள்ளார். ஆனால் ராஜேஷ் – கலைவாணி இடையேயான கள்ளத்தொடர்பு காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. அதனால் கையும் களவுமாக சிக்கியிருக்கிறார் ராஜேஷ்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலியின் தூண்டுதலின் பேரில்தான் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் வாசிங்க: கஞ்சா வாங்க பணம் தராததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!..